சாரதி அனுமதிப்பத்திரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு விதிக்கப்பட்ட வரம்பு 15 வீதமாக இருந்தாலும், அது திருத்தத்திற்கான அதிகபட்ச வரம்பு மட்டுமேயாகும் அன்றி, தீர்மானிக்கப்பட்ட மதிப்பு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் ஒருமுறை கட்டணத் திருத்தம் இடம்பெறுவதால் இந்தக் கட்டணத் திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல் | Driving License Fees Increasing Announcement

இறுதியாகக் கட்டணத் திருத்தம் 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீத கட்டணத் திருத்தம் பொதுவாக மேற்கொள்ளப்பட வேண்டும். 

இருந்தாலும், இந்த ஆண்டுக்கான கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.