டக்ளஸ் குறி வைக்கும் அமைச்சுப் பதவி?

டக்ளஸ் குறி வைக்கும் அமைச்சுப் பதவி?

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இரண்ட ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், வட மாகாணத்தை மையப்படுத்தி அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனாந்தா கோரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட மாகாணத்தின் அபிவிருத்தியை மையப்படுத்திய அமைச்சை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை அவர் கோருவார் என்று அவரின் கட்சியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சராகவே இவர் மீண்டும் நியமிக்கப்படுவதற்கான சமிக்ஞைகளே ராஜபக்ஸக்களிடம் இருந்து கிடைத்து உள்ள நிலையில், வட மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று ஒன்றை உருவாக்கி வழங்குமாறு கோர உள்ளார் கூறப்படுகிறது.

இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சு பதவிக்கு மேலதிகமாக பிரதி அமைச்சு ஒன்றையும் வழங்குமாறு அவர் கேட்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.