
மக்கள் சந்திப்புக்கு ஆவா குழு அச்சுறுத்தல்: முன்னணியின் சந்திப்பு ரத்து
இணுவிலில் நடைபெறவிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நடைபெறவில்லை என்று கட்சி தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உத்தியோக பூர்வ ருவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் நடைபெறவிருந்த சந்திப்பே அச்சுறுத்தல் காரணமாக ரத்துச் செய்யப்பட்டதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலனாய்வாளர்களின் பின்புலத்தை கொண்ட ஆவா குழு வாள்களைக் காட்டி மிரட்டி, கதிரைகளை அடித்து உடைத்ததால் குறித்த மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை.
பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் தொடர்ச்சியாக இவ்வாறான மக்கள் சந்திப்புக்களை முன்னணி நடத்திவருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.