இரவுநேர தபால் ரயிலில் மோதி உயிரிழந்த நபர்

இரவுநேர தபால் ரயிலில் மோதி உயிரிழந்த நபர்

   மருதானையில் இருந்து காலி நோக்கிப் பயணித்த இரவுநேர தபால் ரயிலில் மோதி ஒருவர் நேற்று (06) இரவு உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இரவுநேர தபால் ரயிலில் மோதி உயிரிழந்த நபர் | Man Died Hit By A Night Mail Train Sri Lanka

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.