அடுத்த ஐந்தாண்டுகளில் துறைமுக நகர இலக்கு! அரசாங்கத்தின் விசேட அறிக்கை

அடுத்த ஐந்தாண்டுகளில் துறைமுக நகர இலக்கு! அரசாங்கத்தின் விசேட அறிக்கை

கொழும்பு துறைமுக நகரம் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் உறுதிசெய்யப்பட்ட முதலீடுகளைப் பெற்றுள்ளது என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைத் திரட்ட அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல முக்கிய வளர்ச்சித் திட்டங்களின் மூலம் இந்த முதலீட்டு இலக்கு ஆதரிக்கப்படும் என்று துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவற்றில் இரண்டு பெரிய அளவிலான குடியிருப்புத் திட்டங்கள், ஒரு நவீன ஹோட்டல் மற்றும் ஒரு மாநாட்டு மையம் ஆகியவை அடங்கும் என அபேசிங்க விவரித்துள்ளார்.

 

உறுதிசெய்யப்பட்ட பல முதலீடுகல்

இது குறித்து அவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், 

அடுத்த ஐந்தாண்டுகளில் துறைமுக நகர இலக்கு! அரசாங்கத்தின் விசேட அறிக்கை | Port City Target Government S Special Report

“பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கடந்த வாரம் நடைபெற்ற அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில் கொழும்பு துறைமுக நகரம் ஒரு முக்கிய முதலீட்டு வாய்ப்பாக முன்வைக்கப்பட்டது .

ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட பல முதலீடுகளில் முன்னணி சர்வதேச முதலீட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர் .

துறைமுக நகரத்தில் வழங்கப்படும் வரிச் சலுகைகளை சர்வதேச தரத்திற்கு இணையாகக் கொண்டுவரும் நோக்கிலும், அதேவேளையில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் அதன் கவர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும், அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.