தனியார் வகுப்பிற்குச் சென்ற 3 மாணவிகள் மாயம் - பொதுமக்களிடம் காவல்துறை அவசர கோரிக்கை

தனியார் வகுப்பிற்குச் சென்ற 3 மாணவிகள் மாயம் - பொதுமக்களிடம் காவல்துறை அவசர கோரிக்கை

பலாங்கொடை, பின்னவல, எல்லாராவ பிரதேசத்தில் வசித்து வரும் 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன மூன்று மாணவிகளும் பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் தகவலின்படி, குறித்த மாணவிகள் நேற்று (31) மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், இதுவரை வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

 

மேலதிக விசாரணை

காணாமல் போன மாணவிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பலாங்கொடை காவல்துறையினரும் மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் வகுப்பிற்குச் சென்ற 3 மாணவிகள் மாயம் - பொதுமக்களிடம் காவல்துறை அவசர கோரிக்கை | Three Schoolgirls Reported Missing In Balangoda

பலாங்கொடை காவல் நிலையம்: 045-2287222 பெற்றோரின் தொலைபேசி இலக்கங்கள்: 076-7070913 / 077-1658788

இச்சம்பவம் தொடர்பில் பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.