யாழில் 11 இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்..! முருகன் ஆலயமொன்றில் சம்பவம்
யாழில் (Jaffna) முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் ஒரு மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.
யாழ். நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான திருவிழாலேயே மாம்பழம் ஒன்று 11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் பகுதியில் 'முருகையா தேவஸ்தானம்' புகழ்பெற்ற முருகன் கோயிலாகும்.
போட்டி போட்டு ஏலம்
வருடாந்த பெரும் திருவிழா சிறப்பாக இடம்பெற்ற நிலையில், மாம்பழ திருவிழாவில் மாம்பழம் ஒன்று 11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

கடந்த வருடம் 10 லட்சத்திற்கு மாம்பழம் ஏலம் விடப்பட நிலையில் , இம்முறை 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த பணமானது ஆலய அபிவிருத்திகளுக்கு செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.