இந்திய தூதரக அதிகாரிகள் பாகிஸ்தானில் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு!

இந்திய தூதரக அதிகாரிகள் பாகிஸ்தானில் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு!

இந்திய தூதரக அதிகாரிகள் துன்புறுத்தல் தொடர்பாக கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு இந்தியா கடிதம் அனுப்பி உள்ளது. டெல்லியில் உள்ள விசாப்பிரிவில் பணியாற்றிய இரு பாகிஸ்தான் அதிகாரிகள், உளவுபார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய மத்திய அரசு உத்தரவு பிற்பித்துள்ளது.

இதன்காரணமாக  இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகள் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இந்தியா பாகிஸ்தான் வெளியுறவுத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. குறித்த கடித்தில்,  “2020 மே 31 முதல் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டல்,  ஊடுருவும் கண்காணிப்பு மற்றும் உடல் ரீதியான அச்சுறுத்தல்கள் போன்றவை அதிகரித்து உள்ளன.

ஜூன் 5 மற்றும் மற்றொரு ஜூன் 6 ஆகிய நாட்களில் இதுபோன்ற இரண்டு நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்து உள்ளன. ஜூன் 6 ஆம் திகதி  இந்தியாவின் தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா தனது காலை நடைப்பயணத்தின் போது நெருக்கமாகப் பின்தொடரப்பட்டு உள்ளார்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய துன்புறுத்தல் முறை 1961 ஆம் ஆண்டு வியன்னா இராஜதந்திர உறவுகளின் மாநாடு மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள இராஜதந்திர தூதரக பணியாளர்கள் நடத்தப்படுவது நடத்தை விதிமுறைகளை தெளிவாக மீறும் வகையில் காணப்படுகிறது” என  இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.