முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினம்: 20-8-1944

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினம்: 20-8-1944

ராஜீவ் காந்தி 1944-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ந்தேதி ஜவர்கலால் நேரு மகளான இந்திரா காந்திக்கும், பெரோஸ் காந்திக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் அரசியல் வாரிசாக கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தில் காலமான பின்னர் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தார்.

 

ராஜீவ் காந்தி 1944-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ந்தேதி ஜவர்கலால் நேரு மகளான இந்திரா காந்திக்கும், பெரோஸ் காந்திக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார்.

இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் அரசியல் வாரிசாக கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தில் காலமான பின்னர் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தார்.

 


1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1866 - அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜான்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

* 1914 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை ஜெர்மனியப் படைகள் கைப்பற்றின.

* 1917 - இலங்கையில் ஒரு ரூபாய் தாள் வழங்கப்பட்டது.

* 1940 - மெக்சிகோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகாயமடைந்து அடுத்த நாள் மரணமடைந்தார்

* 1944 - இரண்டாம் உலகப் போர்: ருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.

* 1948 - இலங்கை குடியுரிமை சட்டம்: இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10 லட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

* 1953 - ஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

* 1960 - செனெகல், மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.

* 1968 - பனிப்போர்: 2 லட்சம் வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன.

* 1975 - நாசா வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.

* 1977 - நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.

* 1988 - ஈரான்– ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.

* 1991 - எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.

* 1997 - அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

* 2006 – அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.

* 2006 - நமது ஈழநாடு பணிப்பாளர், முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமகராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.