
யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்து கொண்ட நபர்...
யாழ்ப்பாணத்தில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் நகைப் பட்டறையில் பணியாற்றும் 40 வயதான நபர் ஒருவரே பொட்டாசியம் அருந்தி உயிரிழந்துள்ளதாக என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (17.07.2023) இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுவிலில் உள்ள அவரது வீட்டிலேயே கடன் பிரச்சினை காரணமாக அவர் இவ்வாறானதொரு தவறான முடிவு எடுத்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.