
யாழ். மீசாலையில் தொடருந்தில் மோதுண்டு வயோதிபர் உயிரிழப்பு ..!
யாழ்ப்பாணம் - தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் தொடருந்தில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் இன்று (22.07.2023) முற்பகல் 11:15 மணிளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த கடுகதி தொடருந்தில் மோதுண்டே குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மீசாலை கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட போதே விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.