பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை வீட்டுக்குள் இழுத்து சென்று தாக்குதல்; தமிழர் பகுதியில் சம்பவம்

பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை வீட்டுக்குள் இழுத்து சென்று தாக்குதல்; தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில், வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (31)இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை வீட்டுக்குள் இழுத்து சென்று தாக்குதல்; தமிழர் பகுதியில் சம்பவம் | Police Dragged Into House And Attackedநிலாவெளி, உப்புவெளி அடம்போடை பகுதியில், தலைகவசம் அணியாமல் அதிக சத்தத்துடன் சென்ற மோட்டார் சைக்கிளை, வீதி பாதுகாப்பு பணியில் நின்ற பொலிஸார் நிறுத்த முயன்றபோது, ​​சந்தேகநபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 ​​வாக்குவாத்தை அடுத்து சிலர் சேர்ந்து பொலிஸாரை வீட்டுக்குள் இழுத்து சென்று அடைத்துவைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் பொலிஸாரின் கையடக்க தொலைபேசியை சேதப்படுத்தி, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது .

சம்பவம் தொடர்பில் அடம்போடை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் , மேலும் பேர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.